எம்மைப்பற்றி செய்திகள் சேவைகள் பிரசுரித்தல் விபரம் பிரிவுகள் வெப் இறக்கம்
 
நோக்கம்
“எதிர்கால சந்ததியினரின் உரிமைகளைப் பாதுகாத்துக்கொண்டு வறுமையை ஒழிக்கும் காணிகளில் உயர்ந்த பலன்களைப் பெறும் இலங்கையை நோக்கி ………………..”

பணிக்கூற்று
“சூழலின் சமநிலை பேணுமாறு தொடர்புடைய சகல பிரிவுகளிலும் சிறந்த கூட்டிணைப்புடன் அபிவிருத்தியின் நீண்டகாலம் நிலவும் தன்மையினை நோக்கமாகக் கொண்டு அரச காணிகளை உயர்ந்த மட்டத்தில் பயன்படுத்திக் கொள்வதனை உறுதிப்படுத்தும் சிறந்த முகாமைத்துவத்தை நடத்திச் செல்லுதல் ஆகும்”.
 
சேவைகள்
அரசின் காணிக் கொள்கைகளைத் தீர்மானித்தல் மற்றும் அதற்கேற்றவாறு குறித்த தாபனங்களைச் செயற்படுத்துதல்.
அரச காணிகளைக் கையுதிர்த்தல்
கையுதிர்த்தல் செய்யப்பட்டுள்ள காணிகளுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல் ரண்பிம உறுதிகள் வழங்குதல்
காணி அபிவிருத்தி
காணிகள் தொடர்பான வருமானத்தைச் சேகரித்தல் மற்றும் கணக்கீடுகள் பேணுதல்
உலக உணவுத்திட்டத்தின்கீழ், அத்தியாவசிய உணவுப் பொருள்களை அகற்றுதல், களஞ்சியப்படுத்துதல் மற்றும் விநியோகம் செய்தல்
பொதுமக்களின் காணிப் பிரச்சினைகளைக் குறைப்பதற்கான நடமாடும் சேவைகளை நடத்துதல்
சட்டப்பிரிவு
 
காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்

சிங்கள மன்னர்கள் ஆட்சி செய்த காலப்பகுதியில் அனைத்துக் காணிகளும் அரசனுக்கே உரிமையாக இருந்ததுடன், காணிகளின் உரிமைகளும் அவற்றை அனுபவிப்பதன் மூலமே நிர்ணயிக்கப்பட்டது. அவை பரம்பரை வழியில் வந்த காணிகளாகும். நிந்தகம், விஹாரகம் ஆகியவாறு காணிகள் கையுதிர்த்தல் செய்யப்பட்டது.

இவ்வாறாக வழக்கிலிருந்து வந்த காணிகளின் உரிமை, 1815ஆம் ஆண்டில் இலங்கை பிரித்தானியாவின் ஆட்சியின்கீழ் வந்தது தொடக்கம் நடைமுறையில் இருந்து வந்த 1840ஆம் ஆண்டின் வரண்ட நிலச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதும் மாற்றம் கண்டது. இதன் பிரகாரம், நாட்டின் மொத்தக் காணிகளில் பெரும்பகுதி அரசுக்குரித்தான காணிகளாக நிர்ணயிக்கப்பட்டதுடன் அதுவரையிலும் பரம்பரை வழிமுறையில் காணிகளை அனுபவித்து வந்த பெருவாரியான இலங்கை மக்களுக்கு அந்தக் காணிகள் உரிமையற்றதாக ஆகின.

பின்னர், 1931ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட டொனமூர் அரசியல் சட்டத்தின் மூலமாகக் கிடைத்த பாதியளவு சுதந்திர நிருவாக அமைப்பு முறை மூலமாகக் காணிகளை இழந்த மக்களுக்குக் காணிகளை வழங்கவேண்டிய தேவை தலைதூக்கியது. ஆகையினால் இந்த வேலைத்திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்குடன், காணி நிருவாகம் காணியைப் பாதுகாத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கென 1935ஆம் ஆண்டில் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய நிருவாகக் கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் காணி ஆணையாளர் திணைக்களம் நிறுவப்பட்டது. அப்போது மத்திமப்படுத்தப்பட்ட திட்டத்தின்கீழ், அரசாங்க அதிபரின் அலுவலகம் மூலமாகக் காணி தொடர்பான விடயங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும்>>

செய்திகளும் நிகழ்வுகளும்

‘பிம்சவிய’ வேலைத்திட்டம்

  • ‘பிம்சவிய’ (காணி உரித்துச் சான்றுப் பத்திரம் வழங்குதல்) வேலைத் திட்டத்தின் கீ்ழ், காணிக்குரிய உரித்தைப் பதிவு செய்து கொள்வதை இலகுவாக்கும் நோக்குடன், அரச காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கி குறித்த காணித் துண்டுகளில் வதியும் மக்களுக்குக் காணிக்குரிய உரித்தைப் பெற்றுக் கொடுப்பதாகும்.
    மேலும>>

  •  
    பிரசுரித்தல் விபரம்
    MobileOffice - 03rd June, 2007
    Rapiebant me spectacula theatrica, plena imaginibus miseriarum mearum et fomitibus ignis mei. idunt ut labore et dolore magna aliquyam eratRapiebant me spectacula theatrica, plena imaginibus miseriarum mearum et fomitibus ignis mei. idunt ut labore et dolore magna aliquyam erat
    மேலும்>>
    Download Tamil
        
    © 2007 Land Commissioner General's Department All Rights Reserved – Developed in Association with Site By